அட.. இது நல்லா இருக்கே! விலை உயர்வில் இருந்து தப்பிக்க ஜியோ, ஏர்டெல் & BSNL பயனர்களுக்கு ஒரு வழி இருக்கு!
யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறோம், டிசம்பர் மாதம் வந்துவிட்டது. அதாவது முதலில் வோடாபோன் ஐடியா நிறுவனம் அதன் விலைகளை உயர்த்தவுள்ளது, அதை தொடர்ந்து ஜியோ, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களும் அதன் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்தவுள்ளது.

 

புதிய மற்றும் அதிகரிக்கப்பட்ட விலைகளை சந்திக்க ஜியோ, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சில வாரங்கள் மட்டுமே உள்ளது மறுகையில் உள்ள வோடபோன் ஐடியா பயனர்களுக்கு ஒரு நாள் மட்டுமே உள்ளது,

 

அவர்களுக்கு நாளை டிசம்பர் 1 முதல் புதிய விலை நிர்ணயங்கள் அமலுக்கு வரும். நாளை வந்தால் என்ன? இரு வாரம் கழித்து வந்தால் என்ன? யாருமே இந்த கட்டண உயர்விலிருந்து தப்பிக்க போவதில்லை என்று தானே நினைக்கிறீர்கள்? - இல்லை! தப்பிக்க ஒரு வழி இருக்கிறது.


தை வழி என்று கூறுவதை விட ஒரு சிறிய முன்னெச்சரிக்கை அல்லது கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்திக் கொள்ளும் ஒரு செயல் என்று கூறினால் நன்றாக இருக்கும்! நீங்கள் ஜியோ பயனராக இருந்தாலும் சரி, அல்லது பிஎஸ்என்எல் பயனராக இருந்தாலும் சரி.


நாளை முதல் அறிவிக்கப்படவுள்ள கட்டண உயர்விற்கு முன்பாகாவே ஒரு அட்டகாசமான மற்றும் நீண்ட கால ப்வேலிடிட்டியை வழங்கும் ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்து, அதை ரீசார்ஜ் செய்து கொண்டால் அடுத்த மூன்று அல்லது ஆறு மாதங்கள் முதல் ஓராண்டு காலம் வரையிலாக உங்களுக்கு எந்த கவலையும் இருக்காது. மேலும் அறிவிக்கப்படவுள்ள புதிய கட்டண உயர்வானது உங்களை எந்த வகையிலுமே பாதிக்காது!


 


"அட இது நல்ல யோசனையாக இருக்கிறதே?" என்பவர்களுக்கு, எந்த திட்டத்தை தேர்வு செய்வது என்பது குழப்பம் இருப்பின், இங்கே தொகுக்கப்பட்டுள்ள சிறந்த நீண்டகால ப்ரீபெய்ட் திட்டங்களை (ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல்) சரிபார்க்கவும். பின்னர் அதிலொன்றை தேர்வு செய்து ரீசார்ஜ் செய்து புதிய கட்டண உயர்வில் இருந்து எஸ்கேப் ஆகிக்கொள்ளவும்!