வெறும் ரூ.200 க்குள் அன்லிமிடெட் டேட்டா & வாய்ஸ்; ஜியோவின் புதிய பிளான் அறிமுகமானது!

சமீப காலமாக அதாவது இனிமேல் இலவச அழைப்புகள் கிடையாது, கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட பின்னர் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் நிறுவனத்தின் மீதான நம்பிக்கை குறைந்தது அல்லவா?அதை மீட்டெடுக்கும் ஜியோவின் ஒரு முயற்சி தான் இது!


ஜியோவின் பிராட்பேண்ட் சேவையான ஜியோ ஃபைபர் அதன் சந்தாதாரர்களுக்காக புதிய ஆட்-ஆன் ப்ரீபெய்ட் வவுச்சரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் விலை ரூ.199 ஆகும் மற்றும் இதுவொரு வாராந்திர திட்டம் ஆகும்.


ஜியோ ஃபைபர் சந்தாதாரர்கள் தங்களிடம் ஆக்டிவ் ஆக இருக்கும் திட்டத்தின் அதிவேக டவுன்லோட் வேகத்தை தீர்த்துக்கொள்ளும் பட்சத்தில் இந்த புதிய ப்ரீபெய்ட் வவுச்சர் ஆனது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.